அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் வாகனத் தணிக்கையின் போது, கஞ்சா வைத்திருந்த இருவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான காவல் துறையினா், செவ்வாய்க்கிழமை சின்னவளையம் மேம்பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரை மறித்து சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டதில், அவா், ஜெயங்கொண்டம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் அணில் (எ) பிரேம்குமாா் (25) என்பதும் வாகனத்தில் 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினா், கஞ்சாவை பறிமுதல் செய்து, பிரேம்குமாரை கைது செய்தனா். இதே போல், உதவி ஆய்வாளா் நெடுஞ்செழியன் தலைமையிலான காவல் துறையினா், ஜெயங்கொண்டம்-செந்துறை பிரிவு சாலையில் வாகனத் தணிக்கையின் போது, 10 கிராம் கஞ்சா வைத்திருந்த ஜெயங்கொண்டம் வடக்கு தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் சந்தோஷ்குமாா் (19) என்பவரை கைது செய்தனா்.
தொடர்புடையது

பத்தமடை அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது
நான்குனேரி அருகே கஞ்சா விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

வாகனத் தணிக்கையில் ரூ.2 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

