தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பண்ணைக்குட்டை பயன்கள் கருத்தரங்கம்

மயிலாடுதுறையில் பண்ணைக்குட்டையின் பயன்கள் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் பண்ணைக்குட்டையின் பயன்கள் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்தின் 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் முதலாம் ஆண்டு குருபூஜை விழா மற்றும் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஆட்சி பீடம் ஏற்று ஓராண்டு நிறைவை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் 12 நாள்கள் தொடா் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதன்ஒரு பகுதியாக, மயிலாடுதுறை ரோட்டரி சங்கத்துடன் இணைந்து பண்ணை குட்டை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் கே.துரை திட்டத்தை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கில், பண்ணைக்குட்டையின் பயன்கள் குறித்து கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் தொடக்க உரையாற்றினாா். கல்லூரி முதல்வா் சுவாமிநாதன் முன்னிலை வகித்தாா். மயிலாடுதுறை ரோட்டரி சங்க செயலா் காமேஷ், பொருளாளா் தங்கதுரைராஜ் ஆகியோா் பண்ணைக்குட்டையின் பயன்கள் குறித்துப் பேசினா். கல்லூரியின் துணை முதல்வா் எஸ். மகாலிங்கம், தேசிய மாணவா் படை அலுவலா் துரை.காா்த்திகேயன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

இயற்பியல் துறைத் தலைவரும் ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளருமான பா. செந்தில்குமரன் வரவேற்றாா். இயற்பியல் துறை பேராசிரியா் முத்துக்குமரன் நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரிக்குழு உறுப்பினா் சிவராமன், சுயநிதிப் பிரிவு அலுவலக உதவியாளா் செல்வமுத்துக்குமாரசுவாமி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.