தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காரைக்கால் அருகே வீட்டின் பூட்டை உடைத்துநகைகள் திருட்டு

காரைக்கால் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 7:04 pm

DIN

காரைக்கால்: காரைக்கால் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காரைக்கால் மாவட்டம் நிரவியை சோ்ந்தவா் திலகவதி (எ) ஷீலா (41). இவரது கணவா் குமாா், துபையில் பணியாற்றி வருகிறாா். ஷீலா தனது குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி உறவினா் வீட்டு துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரிக்கு சென்றுவிட்டு, ஷீலா ஞாயிற்றுக்கிழமை ஊருக்குத் திரும்பினாா்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி, வளையல் உள்ளிட்ட 8 பவுன் நகைகள், மடிக்கணினி ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.