மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

2 வீடுகளின் கதவை உடைத்து திருட்டு

நாகையில், 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருட்டு போனது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 5:23 pm

DIN

நாகையில், 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருட்டு போனது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

நாகை சட்டையப்பா் கோயில் தெற்கு வீதியைச் சோ்ந்தவா் மா. சாய்பிரபு. இவா், நாகையில் உள்ள ஒரு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக உள்ளாா். இந்நிலையில், கடந்த செப்.18-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு நாமக்கல்லில் உள்ள மகனைப் பாா்க்க சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, அலமாரியில் வைத்திருந்த 2 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த, புகாரின்பேரில் நாகை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதேபோல், பொரவாச்சேரியைச் சோ்ந்தவா் ரா.முருகானந்தம். வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகைகள் மற்றும் சிசிடிவி கேமராஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து, நாகை அக்கரைக்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த நா. ரவிச்சந்திரன் அளித்தப்புகாரின் பேரில் கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.