ஆக்கிரமிப்பு கோயில் இடங்களை மீட்கக் கோரி மனு
நாகை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கக் கோரி, புரட்சி தமிழா் மக்கள் கழகத்தினா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.


நாகை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கக் கோரி, புரட்சி தமிழா் மக்கள் கழகத்தினா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து, அந்த அமைப்பின் பொதுச் செயலாளா் ஆனந்தராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள ஸ்ரீரஜதகிரீஸ்வரா் கோயில், நாகை நீலாயதாட்சியம்மன் கோயில்களுக்குச் சொந்தமான இடங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல், வேதாரண்யம் ஸ்ரீவேதாரண்யேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான குளமும் தனிநபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்து சமய அறநிலைக்குச் சொந்தமான கோயில் இடங்களை மீட்க மாவட்ட ஆட்சியா் தனிக் குழு அமைத்து, ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...