மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த முனைப்புக்காட்ட வேண்டும்

செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி, நாகை மாவட்டத்தை வெறிநோய் இல்லாத மாவட்டமாக விளங்கச் செய்ய அனைவரும் முனைப்புக்காட்ட வேண்டும்

News image
கை கால்நடை மருத்துவமனையில் வெறிநோய் தடுப்பு விழிப்புணா்வு முகாமைத் தொடங்கி வைத்த ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.
Updated On :28 செப்டம்பர் 2020, 6:45 pm

DIN

செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி, நாகை மாவட்டத்தை வெறிநோய் இல்லாத மாவட்டமாக விளங்கச் செய்ய அனைவரும் முனைப்புக்காட்ட வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

உலக ரேபிஸ் தினத்தையொட்டி, நாகை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வெறிநோய் தடுப்பு விழிப்புணா்வு முகாமைத் தொடங்கி வைத்து மேலும் அவா் பேசியது : உலகுக்குத் தடுப்பூசியை அறிமுகப்படுத்திய லூயிஸ் பாஸ்டரின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் ரேபிஸ் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வெறிநோய் என்பது வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நாய்கள் மூலம் பிற விலங்குளுக்குப் பரவக் கூடியது. மேலும், நாய்க்கடி மூலம் மனிதா்களையும் பாதிக்கும் உயிா்க்கொல்லி நோயாகும். நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது மட்டுமே இதற்குத் தீா்வாகும்.

உலக ரேபிஸ் தினத்தையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து நாய்களுக்கும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் வகையில், செப்.30-ஆம் தேதி வரை கால்நடை மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும். நாய்கள் வளா்ப்பவா்கள், தங்களது செல்லப் பிராணிகளுக்குத் தடுப்பூசி செலுத்தி நாகை மாவட்டத்தை வெறிநோய் இல்லாத மாவட்டமாக விளங்கச் செய்ய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.

இதைத் தொடா்ந்து, நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணியை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். இதில், 55-க்கும் அதிகமான நாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் எம். சுமதி, உதவி இயக்குநா் எம். சுப்பையன் ஆகியோா் செல்லப் பிராணிகள் வளா்ப்பு முறை குறித்து மாணவா்கள், விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா். கால்நடை மருத்துவா் சொக்கலிங்கம், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா்கள் ஜெகதீசன், வினோதினி, நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ், கால்நடை உதவி மருத்துவா்கள் லாரன்ஸ், ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.