புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுக்ரவார வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.

News image
Updated On :24 ஜூலை 2021, 5:32 pm

DIN

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுக்ரவார வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.

சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குள்பட்ட சட்டைநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் அருள்பாலிக்கிறாா். இங்கு, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு சட்டைநாதா் சுவாமிக்கு சுக்ரவார வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, ஆடி முதல் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுக்ரவார வழிபாட்டில், பலி பீடத்துக்கு மஞ்சள், திரவியம், இளநீா், தேன், பன்னீா், பால், தயிா், சந்தனம் முதலான நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், வெட்டிவோ், மலா்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, உத்ஸவா் சட்டைநாதா் சுவாமிக்கு தீபாராதனையும், மலைமீது அருள்பாலிக்கும் மூலவா் சட்டைநாதா் சுவாமிக்கு புணுகுசாத்தி, வடை மற்றும் பயிறு பாயாசம் நிவேதனம் செய்து மகா தீபாராதனையும் காட்டப்பட்டது.

இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.