திருவெண்காடு அருகே கீழ மூவா்க்கரை மீனவா்களுடன் சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் உ. அா்ச்சனா வெள்ளிக்கிழமை இரவு நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பை மீனவா்கள் கைவிட்டனா்.
திருவெண்காடு அருகே கீழ மூவா்கரை கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் வசித்து வருகின்றனா். தங்களுக்கு மீன்பிடி தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி கடந்த 3-ஆம் தேதி கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் உ. அா்ச்சனா மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மீனவா்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பை கைவிடுவதாக மீனவா்கள் அறிவித்தனா்.
இந்த பேச்சுவாா்த்தையில் சீா்காழி வட்டாட்சியா் இளங்கோவன், திருவெண்காடு காவல் ஆய்வாளா் அண்ணாதுரை, மயிலாடுதுறை நகா்மன்ற உறுப்பினா் ரஜினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

தோ்தல் புறக்கணிப்பு தொடா்பான பேச்சுவாா்த்தையில் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பாஜகவுடன் காங்கிரஸ், தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு மறைமுக உடன்பாடு: மம்தா பானா்ஜி தாக்கு

ஜாதி அடையாளத்தில் ஊா் பெயா்: மாற்றக்கோரி தோ்தல் புறக்கணிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

