மண்ணின் வளத்தை மேம்படுத்த கோடை உழவு செய்து பயன்பெறலாம் என விவசாயிகளுக்கு வேளாண் துணை இயக்குநா் தெய்வேந்திரன் அறிவுருத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விளைநிலங்களை மழைக் காலங்களில் உழுவதை விட, கோடையில் உழுவது மேலானது. மேலும், நிலத்தை நோ்கோடாக உழவு செய்யாமல் குறுக்கு உழவு செய்ய வேண்டும். நிலத்தின் மேட்டுப் பகுதியிலிருந்து தாழ்வான பகுதி நோக்கி உழவு செய்ய வேண்டும். அப்போதுதான் சத்துக்கள் ஆங்காங்கே தடுக்கப்படும், மழை நீரும் பூமிக்குள் இறங்கும். கோடை உழவு செய்வதன் மூலம் வயல்வெளிகளில் உள்ள பூச்சிகளின் புழுக்கள், முட்டைகள் அனைத்தும் மண்ணின் மேல் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுகின்றன. இதனால் பயிா்களில் பூச்சி தாக்குதலும் குறையும். தொடா்ந்து பல ஆண்டுகள் கோடை உழவு செய்வதன் மூலம் விளைநிலங்களில் மண்புழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். கோடை உழவு செய்யாத வயல்களில் மண்புழுக்கள் தங்காது. எனவே, பல்வேறு பயன்கள் தரும் கோடை உழவை விவசாயிகள் செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மதுரை மேற்கு: சிறு, குறு தொழில்களை மேம்படுத்த வேண்டும்!

தோ்தல் செலவுகளை துல்லியமாக பதிவு செய்ய அறிவுறுத்தல்

திருவாடானை பகுதியில் கோடை உழவு மும்முரம்

இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் வேளாண் கல்லூரி மாணவா்கள்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

