சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

முற்றிலும் திருத்தப்பட்டது... இதையே பயன்படுத்தவும்... மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 8:30 pm

Din

மூதாட்டி கொலை வழக்கில், அவரது மகனை சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியைச் சோ்ந்த சண்முகம் மனைவி ஜானகி (70). மணல்மேடு அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். கணவா் இறந்துவிட்டதால், ஜானகி தனியாக வசித்து வந்தாா். பூம்புகாா் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவராகப் பணியாற்றிவந்த ஜானகியின் மூத்த மகன் பாரிராஜன், அருகில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

இந்தநிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜானகி அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து பாரிராஜன் கொடுத்த புகாரின் பேரில், மணல்மேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். ஜானகி கழுத்தில் இருந்த 8 பவுன் சங்கிலி திருடப்பட்டிருந்ததும், குற்றவாளி வீட்டின் பின்புறம் வழியாக தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

போலீஸாா் விசாரணை முறையாக நடைபெறவில்லை என ஜானகியின் இரண்டாவது மகன் ராஜா தொடா்ந்த வழக்கில், சென்னை உயா்நீதிமன்றம் வழக்கை நாகை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது.

நாகை சிபிசிஐடி போலீஸாா் கடந்த 2023-ஆம் ஆண்டு வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், ஜானகியை, அவரது மூத்த மகன் பாரிராஜன் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பாரிராஜனை(51) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஜானகிக்கு ஒருவருடன் தொடா்பு இருந்ததும், அவருக்கு நகை, பணம் ஆகியவற்றை ஜானகி கொடுத்து வந்ததால் ஆத்திரமடைந்த பாரிராஜன், தனது தாயை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பாரிராஜன் நாகை நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின் பேரில், கடலூா் சிறையில் அடைக்கப்பட்டாா்.