ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

News image
அலுவலா்களின்றி வெறிச்சோடி காணப்பட்ட நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.
Updated On :22 ஆகஸ்ட் 2024, 10:57 pm

Din

நாகை மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; கணினி உதவியாளா்கள், மாவட்ட, வட்டார, திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு பணி வரன்முறை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் இப்போராட்டம் நடைபெற்றது.

நாகை: நாகையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலக அலுவலா்கள், ஒன்றிய பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவியாளா்கள், இளநிலை உதவியாளா்கள், கணினி இயக்குபவா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்ட ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். இதன் காரணமாக நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

கீழ்வேளூா்: கீழ்வேளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அலுவலா்கள் 29 போ் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருக்குவளை: கீழையூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 27 போ் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டம் வெள்ளிக்கிழமையும் (ஆக.23) நடைபெறும் என ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.