கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

கீழ்வேளூரில் குடிநீா் குழாய்கள் பதிக்கப்பட்ட சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில்

Updated On :31 டிசம்பர் 2024, 11:46 pm IST

கீழ்வேளூா்: கீழ்வேளூரில் குடிநீா் குழாய்கள் பதிக்கப்பட்ட சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட ராட்சத குடிநீா் குழாய்கள் அமைக்கும் பணிகள் கீழ்வேளூா் - கச்சனம் சாலையில் கீழ்வேளூரிலிருந்து தேவூா் வரை நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக சீரமைக்கப்படாத நிலையில், சாலையை முறையாக சீரமைத்து தினம்தோறும் ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கீழ்வேளூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் அபூபக்கா் தலைமையில் அக்கட்சியினா் கீழ்வேளூா் ரயில்வே கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனா்.

கீழ்வேளூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் வருவாய்த் துறை,நெடுஞ்சாலை துறை, குடிநீா் வடிகால் வாரியத் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட முயன்றோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உடனடியாக சாலையை சீரமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் பேரில், மறியல் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.