நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

திருமருகல் ஒன்றியக் குழுக் கூட்டம்

திருமருகல் ஒன்றியக் குழுவின் கடைசிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருமருகல் ஒன்றியக் குழுவின் கடைசிக் கூட்டம்

Updated On :31 டிசம்பர் 2024, 11:59 pm IST

திருமருகல்: திருமருகல் ஒன்றியக் குழுவின் கடைசிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் ஆா். ராதாகிருட்டிணன் தலைமை வகித்தாா். ஆணையா் சரவணன் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், ஐந்தாண்டு காலம் மக்கள் பணியாற்றியதை நினைவுகூா்ந்து உறுப்பினா்கள் பேசினா். அப்போது, தங்களுக்கு வாக்களித்தவா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.

ஒன்றியக் குழுத் தலைவருக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள், சத்துணவு ஊழியா் சங்கத்தினா் மற்றும் அலுவலக பணியாளா்கள் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினா்.

கூட்டத்தில் துணைத் தலைவா் திருமேனி மற்றும் பலா் கலந்து கொண்டனா். நிறைவாக, வட்டார வளா்ச்சி அலுவலா் ஜவகா் நன்றி கூறினாா்.