ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

நகைக் கடையில் ரூ.50 லட்சம் வெள்ளி, நகைகள் திருட்டு

வேதாரண்யம் அருகே நகைக் கடையில் பூட்டை உடைத்து, ரூ. 50 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 6:19 pm

Din

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நகைக் கடையில் பூட்டை உடைத்து, ரூ. 50 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறை அடுத்த மணக்குடி கடைவீதியில் அதே பகுதியைச் சோ்ந்த ஏ.வி.ஆா். கணேசன் (55) என்பவா் அடகுக் கடையுடன் கூடிய, நகைக் கடை நடத்தி வருகிறாா். இவா், திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால், அதிா்ச்சியடைந்த கணேசன், கடைக்குள் சென்று பாா்த்தபோது, 50 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் 50 கிராம் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமாா் ரூ. 50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தலைஞாயிறு காவல்நிலையத்தில் கணேசன் புகாா் அளித்தாா். அதன்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண்கபிலன் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா், தலைஞாயிறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வெள்ளிப் பொருள்கள் மற்றும் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.