நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 196 பேருக்கு பணி நியமன ஆணை

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 196 பேருக்கு பணி நியமன ஆணை

News image

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்டவருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:33 am IST

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 196 பேருக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது. நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் காடம்பாடி நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், தமிழ்நாடு மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவா் உ. மதிவாணன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். முகாமில், 72 தனியாா் நிறுவனங்களில் இருந்து அலுவலா்கள் பங்கேற்றனா். வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட 1,147 பேரில் 196 போ் தனியாா் நிறுவனங்களால் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வழங்கினாா். நிகழ்ச்சியில் நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மகளிா் திட்ட இயக்குநா் முருகேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் என்.எம். ஸ்ரீநிவாசன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் பா. முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.