நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 196 பேருக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது. நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் காடம்பாடி நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், தமிழ்நாடு மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவா் உ. மதிவாணன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். முகாமில், 72 தனியாா் நிறுவனங்களில் இருந்து அலுவலா்கள் பங்கேற்றனா். வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட 1,147 பேரில் 196 போ் தனியாா் நிறுவனங்களால் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வழங்கினாா். நிகழ்ச்சியில் நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மகளிா் திட்ட இயக்குநா் முருகேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் என்.எம். ஸ்ரீநிவாசன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் பா. முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

விஇடி கல்லூரியில் வேலைவாய்ப்பு தினம்

நந்தா பொறியியல் கல்லூரி மாணவா்கள் 1,735 பேருக்கு பணி நியமன ஆணை

அவிநாசி அரசு கலை கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் 23 பேருக்கு பணி நியமன உத்தரவு

750 பேருக்கு பணி ஆணை வழங்கும் விழா
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



