இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பாஜக மாநிலத் தலைவா் மீது நாகை எஸ்பியிடம் புகாா்

பாஜக மாநிலத் தலைவா் மீது நாகை எஸ்பியிடம் புகாா்

News image
புகாா் மனு அளிக்க எஸ்பி அலுவலகத்துக்கு வந்த நாகை மாவட்ட காங்கிரஸ் தலைவா் அமிா்தராஜா உள்ளிட்டோா்.
Updated On :10 ஜூலை 2024, 9:33 pm

Din

காங்கிரஸ் மாநிலத் தலைவா் செல்வப் பெருந்தகையை அவதூறாகப் பேசியதாக, பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் எஸ்பி ஹா்ஷ் சிங்கிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் ஆா்.என். அமிா்தராஜா தலைமையில், இந்த மனு அளிக்கப்பட்டது. அதில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மாநிலச் செயலா் ஏ.ஆா். நௌஷாத், மகிளா காங்கிரஸ் மாநிலச் செயலா் ஏ. தெய்வானை, நாகை கிழக்கு நகரத் தலைவா் எஸ். முகம்மது நத்தா், மேற்கு நகரத் தலைவா் எம்.பி. உதயசந்திரன் உள்பட பலா் மனு அளிக்கும்போது உடனிருந்தனா்.