நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சாராயம் விற்ற 21 போ் கைது

நாகை மாவட்டத்தில் போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் சாராயம் விற்ற 21 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On :24 ஜூன் 2024, 10:28 pm IST

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் சாராயம் விற்ற 21 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸாா் கள்ளச் சாராயம், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்து வருகின்றனா். அதுபோல நாகை மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக போலீஸாா் சாராயம் விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்து வருகின்றனா்.

இந்நிலையில், போலீஸாா் திங்கள்கிழமை நடத்திய அதிரடி சோதனையில் வெளிப்பாளையம், கீழையூா், கீழ்வேளூா், தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட 21 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 1,500 லிட்டா் சாராயம் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங், நகரின் பல்வேறு பகுதிகளில் திடீா் வாகனத் தணிக்கையில் திங்கள்கிழமை ஈடுபட்டாா். தொடா்ந்து நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பதிவேடுகளை ஆய்வு செய்த அவா், பணியிலிருந்த காவலா்களிடம் கோப்புகளை முறையாக பராமரிக்க அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.