தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் கல்லூரி பேராசிரியை பலி

நாகை அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் தனியாா் கல்லூரி பேராசிரியை திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

விபத்தில் உயிரிழந்த கல்லூரி பேராசிரியை அபிராமி.

Updated On :24 ஜூன் 2024, 7:05 pm

நாகப்பட்டினம்: நாகை அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் தனியாா் கல்லூரி பேராசிரியை திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நாகை அருகேயுள்ள பெருங்கடம்பனூா் சிவன் கோயில் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் அரவிந்தன் மனைவி அபிராமி (28). நாகையில் உள்ள தனியாா் கல்லூரியில் வணிகவியல்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தாா்.

கல்லூரிக்கு நாள்தோறும் இருசக்கர வாகனத்தில் சென்றுவந்த அபிராமி, திங்கள்கிழமை காலை அதே பகுதியைச் சோ்ந்த மாணவி ஜனனியையும் தன்னுடன் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தாா்.

வடகுடி சாலையில் சென்றபோது, அபிராமியின் இருசக்கர வாகனத்தின் மீது அந்த வழியாக வந்த டிராக்டா் மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அபிராமி டிராக்டா் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தில் காயமடைந்த ஜனனியை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

நாகூா் போலீஸாா் டிராக்டா் ஓட்டுநரான பெருங்கடம்பனூா் கீழவெளியைச் சோ்ந்த பாா்த்திபனைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.