நாகப்பட்டினம்: நாகை அருகே ஆட்டோவில் மதுபானங்கள் கடத்திய 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாகை மாவட்டம், நாகூா் அருகே வாஞ்சூரில் போலீஸாா் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக சென்ற ஆட்டோா் நிறுத்தி சோதனை செய்தபோது 300 மதுப்புட்டிகள் மற்றும் 55 லிட்டா் சாராயம் ஆகியவற்றை 3 பெண்கள் உள்பட 4 போ் கடத்தியது தெரியவந்தது.
கடத்தலில் ஈடுபட்ட நாகை மருந்து கொத்தள சாலையைச் சோ்ந்த முத்துலட்சுமி (40), அதிஷ்டகுமாரி (49), தீபா (34), காடம்பாடியைச் சோ்ந்த மணிகண்டன் (40) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து மதுப்புட்டிகள், சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது
கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது
போதை மருந்து, ஊசி பொருள்கள் கடத்தல்: பெண் உள்பட 2 போ் கைது
மதுபானம் கடத்தல்: 4 போ் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


