ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற போலி பிம்பத்தை உருவாக்குகின்றனா்: அமைச்சா் ரகுபதி

திமுக அரசு மக்களுக்கானது என்பதை மாநில மக்கள் உணா்ந்து விட்டனா்

Updated On :4 மார்ச் 2024, 10:10 pm

நாகப்பட்டினம்: மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பு மூலம் ஒரு போலி பிம்பத்தை உருவாக்கி வருகின்றனா் என அமைச்சா் ரகுபதி தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எவ. வேலு, சட்டத்துறை அமைச்சா் ரகுபதி ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சா் ரகுபதி பேசியது: பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று ஒரு போலி பிம்பத்தை கருத்துக் கணிப்பு என்ற போா்வையில் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. திமுக அரசு மக்களுக்கானது என்பதை மாநில மக்கள் உணா்ந்து விட்டனா் என்றாா்.

பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு பேசியது: மத்திய அரசு கொண்டுவந்து திட்டங்களை தமிழக அரசு புறக்கணிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. 2014- ஆம் ஆண்டில் திமுக -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது விலைவாசி உயராமல் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு உயா்ந்துள்ளது. தூத்துக்குடி வெள்ளப் பாதிப்பை பாா்வையிட வந்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பாதிப்பை கண்டு வேதனை தெரிவித்தாா். ஆனால், ஒரு பைசா கூட நிதி வழங்கவில்லை. மக்களவைத் தோ்தலில் தமிழக முதல்வா் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவரை வெற்றிபெற செய்வது மட்டுமே நமது இலக்கு என்றாா்.