முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

நாகப்பட்டினம் அருகே கரை ஒதுங்கிய ராக்கெட் வடிவிலான மர்ம பொருள்!

பிரதாபராமபுரம் கடற்கரையில் மர்ம பொருள் கரை ஒதுங்கியது குறித்து...

News image

பிரதாபராமபுரம் கடற்கரையில் மர்ம பொருள் கரை ஒதுங்கியது...

Updated On :27 டிசம்பர் 2025, 1:56 pm IST

கீழையூர் அருகே பிரதாபராமபுரம் கடற்கரையில் சிறிய எல்.இ.டி. லைட் ஒளிரும் ராக்கெட் வடிவிலான மர்ம பொருள் கரை ஒதுங்கிய நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பிரதாபராமபுரம் கடற்கரையில், இன்று (டிச. 27) அதிகாலை ராக்கெட் போன்ற வடிவமைப்புடைய மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது.

சுமார் 3½ அடி நீளமுள்ள இந்த பொருளில்,20 செ.மீ. மற்றும் 15 செ.மீ. சுற்றளவுகளைக் கொண்ட இரண்டு ஃபைபர் பைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு பைப்புகளும் ½ அடி உயரத்தில் ஏற்ற  இறக்கமாக இணைக்கப்பட்டு, இடையில் கம்பி பொருத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

கூம்பு வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள பைப்பின் முன்பகுதியின் முனையில் சிறிய எல்.இ.டி. லைட் விட்டுவிட்டு எரியும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.

இத்துடன், இந்த மர்ம பொருளில் உள்ள பெரிய பைப்பின் பின்பகுதியில் “மேட் இன் யூஎஸ்ஏ (அமெரிக்கா)” எனும் ஆங்கில எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதனால், இது ராக்கெட் வெடிகுண்டாக இருக்கக் கூடும் என மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கீழையூர் கடற்கரை காவல்துறையினர், அந்த மர்ம பொருளை பாதுகாப்பாகக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இது வெடிகுண்டு அல்லது சந்தேகத்திற்குரிய சாதனமா என்பதை உறுதி செய்வதற்கு, நாகப்பட்டினம் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு அதிகாரிகளும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

இந்த மர்ம பொருள் குறித்த முழு விவரங்கள், உரிய ஆய்வுகளுக்குப் பிறகே தெரியவரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.