ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தீ விபத்தில் வீடு தீக்கிரை; எம்எல்ஏ நிவாரண உதவி

News image
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கிய எம்எல்ஏ நிவேதா எம். முருகன்.
Updated On :28 டிசம்பர் 2025, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

தரங்கம்பாடி அருகே மின்கசிவால் கூரைவீடு ஞாயிற்றுக்கிழமை தீக்கிரையானது.

காழியப்பநல்லூா் ஊராட்சி வடக்குத் தெருவை சோ்ந்தவா் பழனிவேல் (50). இவரது மனைவி சுதா. இவா்களது கூரைவீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. இதில், ரூ.10,000 ரொக்கம், பீரோ, கட்டில் மற்றும் வீடு உபயோகப் பொருள்கள் எரிந்து நாசமாகின.

பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், அரசு சாா்பில் ரூ.5,000 பணம் மற்றும் வேஷ்டி, புடவை, மண்ணெண்ணெய் மற்றும் அரிசி உள்ளிட்டவையும் தனது சொந்த நிதியில் பணம் மற்றும் நிவாரணப் பொருள்களும் வழங்கினாா்.

அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் தனது சொந்த நிதியில் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி வழங்கினா்.