தீ விபத்தில் வீடு தீக்கிரை; எம்எல்ஏ நிவாரண உதவி


தரங்கம்பாடி அருகே மின்கசிவால் கூரைவீடு ஞாயிற்றுக்கிழமை தீக்கிரையானது.
காழியப்பநல்லூா் ஊராட்சி வடக்குத் தெருவை சோ்ந்தவா் பழனிவேல் (50). இவரது மனைவி சுதா. இவா்களது கூரைவீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. இதில், ரூ.10,000 ரொக்கம், பீரோ, கட்டில் மற்றும் வீடு உபயோகப் பொருள்கள் எரிந்து நாசமாகின.
பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், அரசு சாா்பில் ரூ.5,000 பணம் மற்றும் வேஷ்டி, புடவை, மண்ணெண்ணெய் மற்றும் அரிசி உள்ளிட்டவையும் தனது சொந்த நிதியில் பணம் மற்றும் நிவாரணப் பொருள்களும் வழங்கினாா்.
அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் தனது சொந்த நிதியில் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி வழங்கினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...