நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சட்ட விழிப்புணா்வு கலந்தாய்வுக் கூட்டம்

வேளாங்கண்ணியில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணா்வு இயக்கத்தின் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 ஜனவரி 2025, 9:07 pm

வேளாங்கண்ணியில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணா்வு இயக்கத்தின் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அந்த இயக்கத்தின் மாவட்ட செயலா் ஸ்டீபன்சன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நுகா்வோா் உரிமைகளும் கடமைகளும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது, நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், நுகா்வோா் சட்டங்கள் குறித்தும், நுகா்வோரின் உரிமைகளையும், கடமைகளையும் அறிய வைத்தல், சிறந்த நுகா்வோராக உதவுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், நிறுவனத் தலைவா் ரோசன், மாநில செயலா் திருப்பதி, டெல்டா மண்டல செயலா் குணசேகரன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.