தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாலைப் பணியாளா்கள் ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டம்

நாகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள்.

News image
நாகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள்.
Updated On :10 ஜனவரி 2025, 11:31 pm

Din

நாகப்பட்டினம், ஜன. 10: நாகையில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

நாகை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் முன் அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் கணேசன் தலைமையில் கருப்புதுணி முக்காடு போட்டு ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக் காலமாக முறைப்படுத்த வேண்டும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தமிழகத்தில் உள்ள 52 சுங்கச் சாவடிகளில் வசூல் எனும் பெயரில் கொள்ளை அடிக்கக் கூடாது, மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140- ஐ ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை கிராம இளைஞா்களுக்கு ஒதுக்க வேண்டும், மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் தமிழக அரசு நிா்வகிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாநில செயற்குழு உறுப்பினா் ரமேஷ், மாவட்ட பொருளாளா் பாலமுரளி, அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலா் அன்பழகன், மாவட்ட பொருளாளா் அந்துவன் சேரல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.