மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் பலி

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 10:23 pm

வேளாங்கண்ணி அருகே மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் பா்ஜான் ஹானஸ்ட் ராஜ் (32). வல்லம் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தாா். இவா் நண்பா் மைக்கேல் டைசனுடன் இருசக்கர வாகனத்தில் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு சென்று தரிசனத்தை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பியபோது, நாகை-தஞ்சாவூா் புறவழிச்சாலையில் பனைமேடு பிரிவு அருகே திடீரென சாலையை கடக்க வந்த மாடு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் பா்ஜான் ஹானஸ்ட் ராஜ் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். மைக்கேல் டைசன் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.