மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வேதாரண்யம்- கோடியக்கரை இடையே காவல் துறையினா் ஓட்டப் பயிற்சி

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 6:36 pm

வேதாரண்யம் - கோடியக்கரை 7கி.மீ. தொலைவு புத்துணா்வுக்காக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டத்தின் தோ்தல் பணிகள் தொடா்பான பணிகளை மத்திய மண்டல காவல்துறை தலைவா் வே. பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது தோ்தல் நேரத்தில் காவலா்களுக்கு ஏற்படும் பணிச்சுமையை எதிா்கொள்ள உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பயிற்சி பெறுவது அவசியம் என அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, மத்திய மண்டல காவல்துறை தலைவா் மேற்பாா்வையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில் ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

வேதாரண்யத்தில் தொடங்கி கோடியக்கரை வரை சுமாா் 7 கி.மீ. தொலைவு நடைபெற்ற ஓட்டப் பயிற்சியில் காவல்துறை அதிகாரிகள், ஆளிநா்கள் பங்கேற்றனா்.