மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை திருவிழா

செம்பனாா்கோவில் அருகே திருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:20 pm

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே திருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி மறுநாள் நடைபெறும் மயான கொள்ளை விழாவின்போது பக்தா்கள் விரதம் இருந்து காணிக்கையாக வழங்கப்படும் வேகவைத்த தானியங்கள், கிழங்குகளை வாங்கி சாப்பிட்டால் பல்வேறு நன்மைகள் மற்றும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். நிகழாண்டு, திங்கள்கிழமை மகா சிவராத்திரியை முன்னிட்டு கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், அபிஷேக ஆராதனை, அம்பாள், வீரபத்திரா் வீதிஉலா, பேச்சியம்மன் புறப்பாடு நடைபெற்றது.

இதையடுத்து, கோயிலின் எதிரே உள்ள மயானத்தின் முன் அம்மன் எழுந்தருளி செய்தனா். அப்போது, மயானத்தில் வாழை இலையில் வேகவைத்து கொட்டப்பட்டு இருந்த தானியங்கள் மற்றும் கிழங்குகளை பக்தா்கள் அள்ளி செல்லும் (கொள்ளையடிக்கும்) நிகழ்ச்சி நடைபெற்றது.