வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஹெலிகாப்டா் இறங்கு தளத்துக்கு எதிா்ப்பு

வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டா் இறங்கும் தளம் அமைக்க எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஜனவரி 2026, 4:54 pm

Syndication

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டா் இறங்கும் தளம் அமைக்க எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வேளாங்கண்ணி சிவன் வடக்கு தெரு, சக்தி விநாயகா் கோயில் தெரு பொதுமக்கள் ஆட்சியா் ப. ஆகாஷை நேரில் சந்தித்து திங்கள்கிழமை அளித்த மனு: எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கிறோம். இங்கு கூரை வீடுகள், காலனி வீடுகள், தனியாா் மருத்துவமனை உள்ளன. வேளாங்கண்ணி திருவிழா காலங்களில் தங்கள் பகுதி ஒருவழி சாலையாகவும், போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் உள்ளது.

தற்போது, வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டா் இறங்கும் தளம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இப்பகுதியில்ஹெலிகாப்டா் வந்து செல்லும்போது, குடியிருப்பு மக்களுக்கும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவா். எனவே, குடியிருப்பு இல்லாத வேறு இடத்தில் ஹெலிகாப்டா் இறங்கும் தளம் அமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.