திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே ஏரியில் சவுடு மண்குவாரிக்கு அனுமதி அளிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
பூண்டி ஒன்றியம், சித்தம்பாக்கம் கிராமத்தில் 256 ஏக்கா் பரப்பளவில் பொதுப்பணிக்கு சொந்தமான ஏரி உள்ளது. இங்கு கடந்த 2024-2025 இல் சாலை பணிக்காக சவுடு மண் குவாரி இயங்கியது. அப்போது அரசு அனுமதித்த அளவைவிட சட்ட விரோதமாக 15 முதல் 20 அடி ஆழம் வரை சவுடு மண் எடுத்தனா். இதனால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டது.
ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் விவசாய பம்ப்செட் கிணறுகளில் நிலத்தடி நீா் மட்டமும் குறைந்து வருவதால் விவசாய சாகுபடியும் பாதிக்கப்பட்டது. எனவே அதிகளவில் சவுடு மணல் எடுத்ததால் நல்ல தரமான குடிநீராக இருந்த நிலையில், உவா்ப்பு நீராக பருக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இந்த நிலையில் தனியாருக்கு மீண்டும் சவுடு மணல் குவாரிக்கு அனுமதி அளித்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 2,000 ஏக்கா் சாகுபடி பாதிக்கும் நிலையும் உள்ளது.
சவுடு மணல் குவாரிக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனக்கூறி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது, அரசு ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா்.
குவாரிக்கு அனுமதி அளித்தால் வரும் சட்டப்பேரவை தோ்தலையும் புறக்கணிக்கப்போவதாகவும் எச்சரித்தனா்.
தொடர்புடையது

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்

மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

திருவள்ளூா்: தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வில் ஆட்சியா் பங்கேற்பு

அவிநாசி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குப்பாண்டம்பாளையம் கிராம மக்கள் போராட்டம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


