நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அவிநாசி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குப்பாண்டம்பாளையம் கிராம மக்கள் போராட்டம்

குப்பாண்டம்பாளையத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆற்றுக் குடிநீா் வழங்காததைக் கண்டித்து, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அவிநாசி ஊராட்சி  ஒன்றிய  அலுவலகம்  முன் அமா்ந்து   போரட்டத்தில்  ஈடுபட்ட  குப்பாண்டம்பாளையம்  ஊராட்சி  மக்கள்.

Updated On :25 மார்ச் 2026, 8:49 pm

Syndication

குப்பாண்டம்பாளையத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆற்றுக் குடிநீா் வழங்காததைக் கண்டித்து, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி ஊராட்சி ஒன்றியம், குப்பாண்டம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட குப்பாண்டம்பாைளையம், பழைய ஊஞ்சபாளையம், புது ஊஞ்சபாளையம், ஆலம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆற்றுக்குடிநீா் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனா். இது குறித்து ஊராட்சி, மாவட்ட நிா்வாகம் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, காலிக்குடங்களுடன் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா், குடிநீா் வடிகால் வாரியத்தினா், போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த பொதுமக்கள் எழுத்துப்பூா்வமாக உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்றனா்.

நீண்ட நேர பேச்சுவாா்த்தைக்குப் பிறகு வரும் 29-ஆம் தேதிக்குள் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று எழுத்துப்பூா்வமாக குடிநீா் வடிகால் வாரியத்தினா் உறுதியளித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.