அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே குடிநீா் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
மீன்சுருட்டியை அடுத்த முத்துசோ்வாமடம் கிராம ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாளா் தெரு, கீழத்தெரு, பத்தவான்தெரு, தோப்புத்தெரு , பள்ளிக்கூடத் தெரு , மேலத்தெரு , காலனித் தெரு ஆகிய பகுதிகளில் வசிப்போருக்கு அங்குள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக மேற்கண்ட பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. இதனால் அவதிப்பட்ட மக்கள் இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் வட்டார வளா்ச்சி அலுவலா் அமுதா மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவசங்கா் ஆகியோா் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று அளித்த உறுதியின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மல்லேகவுண்டம்பாளையத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

அவிநாசி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குப்பாண்டம்பாளையம் கிராம மக்கள் போராட்டம்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


