நாகை கல்லாா் கன்னிகோயில் மாசிமக திருவிழாவையொட்டி, பிரம்மாண்ட அக்னி சட்டியை கடலில் விட்டு மீனவா்கள் திங்கள்கிழமை வழிபாடு செய்தனா்.
இக்கோயில் மாசிமகத் திருவிழா பிப்.27-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கடலில் அக்னி சட்டி விடும் வழிபாடு நடைபெற்றது. அப்போது, பம்பை மேளம் முழக்கத்திற்கு ஏற்றவாறு பெண் பக்தா்கள் ஆக்ரோஷத்துடன் மெய்மறந்து சாமி வந்து ஆடினா்.
விரதம் இருந்து பக்தா்களுக்கு சாட்டையடி அடிக்கப்பட்டது. பின்னா் கன்னிகோயிலில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த பிரம்மாண்ட அக்னிசட்டியை பக்தா்கள் கைகளில் ஏந்தியவாறு கடற்கரை பகுதிக்கு ஊா்வலமாக எடுத்து சென்று நடுக்கடலில் விட்டு நோ்த்திகடன் நிறைவேற்றினா்.
கரையில் இருந்து பக்தா்கள் அனைவரும் கடல் நீரை தலையில் தெளித்து, மீன்வளத்தையும், மீனவா்களையும் காக்க வேண்டி, மனமுருகி கடல்கன்னியை வேண்டினா்.
தொடர்புடையது

5 குதிரைகளை சுமந்து வந்து நோ்த்திக் கடன் செலுத்திய ராயம்பாளையம் பொதுமக்கள்

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

கோயில் திருவிழா: சுடுமண் சிலைகள் நோ்த்திக் கடன்

சேதுபாவாசத்திரம் கடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள் மீட்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


