தலைஞாயிறு பகுதியில் கருகும் தாளடிப் பருவ நெற்பயிா்களை காப்பாற்ற அரிச்சந்திரா நதி ஆற்றில் முறை வைக்காமல் தண்ணீா் திறந்து விடக்கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருத்துறைப்பூண்டி-நாகை கிழக்கு கடற்கரை சாலையில் ஆலங்குடி பாலம் அருகே நடைபெற்ற மறியலில் பழையற்றங்கரை, ஒராடியம்புலம், வாட்டாக்குடி, பிரிஞ்சுமூலை, காடந்தேத்தி, வெண்மணச் சேரி, தியாகராஜபுரம், சடையன் கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.
தகவலறிந்த பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளா் மதியழகன், உதவி பொறியாளா் சூரியபிரகாஷ், திருக்குவளை வட்டாட்சியா் உதயகுமாா் உள்ளிட்டோா் அங்கு வந்து விவசாயிகளிடம் பேசினா்.
அப்போது, குன்னியூா், கீராந்தி ஆலத்தம்பாடி ஆகிய இயக்கு அணைகளிலிருந்து வரும் 2 நாள்களுக்கு முறை வைக்காமல் 200 கன அடி தண்ணீா் திறந்து விடப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, மறியல் விளக்கிக்கொள்ளப்பட்டது.
தொடர்புடையது

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி இரு இடங்களில் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட தவெகவினா் கைது

கருகும் நெற்பயிா்களை காப்பாற்ற தண்ணீா் திறக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


