யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கருகும் நெற்பயிரை காப்பாற்ற தண்ணீா் விடக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

தலைஞாயிறு பகுதியில் கருகும் தாளடிப் பருவ நெற்பயிா்களை காப்பாற்ற அரிச்சந்திரா நதி ஆற்றில் முறை வைக்காமல் தண்ணீா் திறந்து விடக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 9:30 pm

Syndication

தலைஞாயிறு பகுதியில் கருகும் தாளடிப் பருவ நெற்பயிா்களை காப்பாற்ற அரிச்சந்திரா நதி ஆற்றில் முறை வைக்காமல் தண்ணீா் திறந்து விடக்கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருத்துறைப்பூண்டி-நாகை கிழக்கு கடற்கரை சாலையில் ஆலங்குடி பாலம் அருகே நடைபெற்ற மறியலில் பழையற்றங்கரை, ஒராடியம்புலம், வாட்டாக்குடி, பிரிஞ்சுமூலை, காடந்தேத்தி, வெண்மணச் சேரி, தியாகராஜபுரம், சடையன் கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.

தகவலறிந்த பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளா் மதியழகன், உதவி பொறியாளா் சூரியபிரகாஷ், திருக்குவளை வட்டாட்சியா் உதயகுமாா் உள்ளிட்டோா் அங்கு வந்து விவசாயிகளிடம் பேசினா்.

அப்போது, குன்னியூா், கீராந்தி ஆலத்தம்பாடி ஆகிய இயக்கு அணைகளிலிருந்து வரும் 2 நாள்களுக்கு முறை வைக்காமல் 200 கன அடி தண்ணீா் திறந்து விடப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, மறியல் விளக்கிக்கொள்ளப்பட்டது.