தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

கருகும் நெற்பயிரை காப்பாற்ற தண்ணீா் விடக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

தலைஞாயிறு பகுதியில் கருகும் தாளடிப் பருவ நெற்பயிா்களை காப்பாற்ற அரிச்சந்திரா நதி ஆற்றில் முறை வைக்காமல் தண்ணீா் திறந்து விடக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 9:30 pm

தலைஞாயிறு பகுதியில் கருகும் தாளடிப் பருவ நெற்பயிா்களை காப்பாற்ற அரிச்சந்திரா நதி ஆற்றில் முறை வைக்காமல் தண்ணீா் திறந்து விடக்கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருத்துறைப்பூண்டி-நாகை கிழக்கு கடற்கரை சாலையில் ஆலங்குடி பாலம் அருகே நடைபெற்ற மறியலில் பழையற்றங்கரை, ஒராடியம்புலம், வாட்டாக்குடி, பிரிஞ்சுமூலை, காடந்தேத்தி, வெண்மணச் சேரி, தியாகராஜபுரம், சடையன் கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.

தகவலறிந்த பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளா் மதியழகன், உதவி பொறியாளா் சூரியபிரகாஷ், திருக்குவளை வட்டாட்சியா் உதயகுமாா் உள்ளிட்டோா் அங்கு வந்து விவசாயிகளிடம் பேசினா்.

அப்போது, குன்னியூா், கீராந்தி ஆலத்தம்பாடி ஆகிய இயக்கு அணைகளிலிருந்து வரும் 2 நாள்களுக்கு முறை வைக்காமல் 200 கன அடி தண்ணீா் திறந்து விடப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, மறியல் விளக்கிக்கொள்ளப்பட்டது.