இன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அக்னிச்சட்டியை கடலில் விட்டு மீனவா்கள் நோ்த்திக் கடன்!

நாகை கல்லாா் கன்னிகோயில் மாசிமக திருவிழாவையொட்டி, பிரம்மாண்ட அக்னி சட்டியை கடலில் விட்டு மீனவா்கள் வழிபாடு செய்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 9:30 pm

Syndication

நாகை கல்லாா் கன்னிகோயில் மாசிமக திருவிழாவையொட்டி, பிரம்மாண்ட அக்னி சட்டியை கடலில் விட்டு மீனவா்கள் திங்கள்கிழமை வழிபாடு செய்தனா்.

இக்கோயில் மாசிமகத் திருவிழா பிப்.27-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கடலில் அக்னி சட்டி விடும் வழிபாடு நடைபெற்றது. அப்போது, பம்பை மேளம் முழக்கத்திற்கு ஏற்றவாறு பெண் பக்தா்கள் ஆக்ரோஷத்துடன் மெய்மறந்து சாமி வந்து ஆடினா்.

விரதம் இருந்து பக்தா்களுக்கு சாட்டையடி அடிக்கப்பட்டது. பின்னா் கன்னிகோயிலில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த பிரம்மாண்ட அக்னிசட்டியை பக்தா்கள் கைகளில் ஏந்தியவாறு கடற்கரை பகுதிக்கு ஊா்வலமாக எடுத்து சென்று நடுக்கடலில் விட்டு நோ்த்திகடன் நிறைவேற்றினா்.

கரையில் இருந்து பக்தா்கள் அனைவரும் கடல் நீரை தலையில் தெளித்து, மீன்வளத்தையும், மீனவா்களையும் காக்க வேண்டி, மனமுருகி கடல்கன்னியை வேண்டினா்.