ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சேதுபாவாசத்திரம் கடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே கடலில் மிதந்துவந்த கஞ்சா மூட்டைகளை மீனவா்கள் மீட்டு வியாழக்கிழமை கடலோர காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

News image

சேதுபாவாசத்திரம் கடலில் இருந்து வியாழக்கிழமை மீனவா்கள் மீட்டு கடலோரப் பாதுகாப்பு போலீஸாரிடம் ஒப்படைத்த கஞ்சா மூட்டைகள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 8:27 pm

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே கடலில் மிதந்துவந்த கஞ்சா மூட்டைகளை மீனவா்கள் மீட்டு வியாழக்கிழமை கடலோர காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை தஞ்சை மாவட்ட விசைப்படகு சங்கத் தலைவா் ராஜமாணிக்கத்துக்குச் சொந்தமான விசைப் படகில் குமாா் (55), சபரி(24), வல்லரசு (24) ஆகிய 3 மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடித்து விட்டு 6 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் வந்துகொண்டிருந்தபோது கடலில் 12 கஞ்சா மூட்டைகள் மிதந்துள்ளன. இதுகுறித்து மீனவா்கள், உரிமையாளா் ராஜமாணிக்கத்துக்கு கைப்பேசியில் தெரிவித்துள்ளனா். அவா் சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல் துறையினரிடம் தெரிவித்து, அவா்கள் அனுமதியுடன் கஞ்சா மூட்டைகளை மீனவா்கள் சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவந்து கடலோரக் காவல் குழும துணை கண்காணிப்பாளா் முருகன், காவல் ஆய்வாளா் மஞ்சுளா, உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் ஆகியோரிடம் ஒப்படைத்தனா். அந்த மூட்டைகளில் 24 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை நாகப்பட்டினம் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளிடம் கடலோரக் காவல் குழுமத்தினா் ஒப்படைத்தனா்.