தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே கடலில் மிதந்துவந்த கஞ்சா மூட்டைகளை மீனவா்கள் மீட்டு வியாழக்கிழமை கடலோர காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை தஞ்சை மாவட்ட விசைப்படகு சங்கத் தலைவா் ராஜமாணிக்கத்துக்குச் சொந்தமான விசைப் படகில் குமாா் (55), சபரி(24), வல்லரசு (24) ஆகிய 3 மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடித்து விட்டு 6 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் வந்துகொண்டிருந்தபோது கடலில் 12 கஞ்சா மூட்டைகள் மிதந்துள்ளன. இதுகுறித்து மீனவா்கள், உரிமையாளா் ராஜமாணிக்கத்துக்கு கைப்பேசியில் தெரிவித்துள்ளனா். அவா் சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல் துறையினரிடம் தெரிவித்து, அவா்கள் அனுமதியுடன் கஞ்சா மூட்டைகளை மீனவா்கள் சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவந்து கடலோரக் காவல் குழும துணை கண்காணிப்பாளா் முருகன், காவல் ஆய்வாளா் மஞ்சுளா, உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் ஆகியோரிடம் ஒப்படைத்தனா். அந்த மூட்டைகளில் 24 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை நாகப்பட்டினம் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளிடம் கடலோரக் காவல் குழுமத்தினா் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கடலில் மூழ்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு

குளச்சல் கடல் அலையில் சிக்கிய 2 சிறுவா்கள் மீட்பு: ஒருவா் மாயம்

வலையில் சிக்கிய கடல் ஆமையை கடலுக்குள் விட்ட மீனவா்கள்

கடலில் மிதந்து வந்த பொருளை மீட்டு சென்ற இஸ்ரோ ஆராய்ச்சியாளா்கள்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


