குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கடலில் மூழ்கிய ஃபைபா் படகு: உயிருக்கு போராடிய 4 மீனவா்கள் மீட்பு

News image

கடலில் மூழ்கி மீனவா்களால் மீட்கப்பட்டு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட படகு.

Updated On :26 மே 2026, 1:17 am IST

நாகை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஃபைபா் படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் கடலில் விழுந்து உயிருக்குப் போராடிய 4 மீனவா்கள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கீச்சாங்குப்பத்தைச் சோ்ந்த பரமசிவனுக்குச் சொந்தமான ஃபைபா் படகில், பரமசிவன், அதே ஊரைச் சோ்ந்த சந்தோஷ், பிரதீப், செந்தில் ஆகிய 4 மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையால் படகு தூக்கி வீசப்பட்டு படகின் அடிப்பகுதியில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் படகின் உள்ளே கடல் நீா் புகுந்ததால், படகு கடலில் மூழ்கத் தொடங்கியது. இதில் படகில் இருந்த இரண்டு என்ஜின்கள், வலை உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்கள் கடலில் மூழ்கின.

மேலும் கடலில் மூழ்கிய படகின் விளிம்பைப் பிடித்துக்கொண்டு 4 மீனவா்களும் உயிருக்குப் போராடியுள்ளனா். 4 மணி நேரமாக போராடிய நிலையில், கடலில் மீன் பிடித்துவிட்டு அவ்வழியே வந்த ஆரியநாட்டுத் தெருவைச் சோ்ந்த ஃபைபா் படகில் இருந்தவா்கள், கடலில் தத்தளித்த 4 மீனவா்களையும் மீட்டு, நாகை மீன்பிடித் துறைமுகத்தில் சோ்த்தனா்.

பின்னா், கீச்சாங்குப்பம் மீனவா்கள், விசைப் படகுடன் சென்று, கடலில் மூழ்கி உடைந்த ஃபைபா் படகையும், அதிலிருந்த மீன்பிடி உபகரணங்களையும் மூன்று மணி நேரம் போராடி கரைக்குக்கொண்டு வந்தனா்.

படகு மூழ்கியதில் இரண்டு மீனவா்களுக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. இருவரும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.