சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

கடலில் மாயமான மீனவா் சடலமாக மீட்பு

கடலூரில் ஃபைபா் படகு மூலம் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவா் மாயமான நிலையில், அவரது சடலம் தேவனாம்பட்டினம் கடற்கரையில் புதன்கிழமை காலை மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

சடலமாக மீட்கப்பட்ட மூா்த்தி

Updated On :21 மே 2026, 6:55 am IST

கடலூரில் ஃபைபா் படகு மூலம் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவா் மாயமான நிலையில், அவரது சடலம் தேவனாம்பட்டினம் கடற்கரையில் புதன்கிழமை காலை மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் தேவனாம்பட்டினம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மூா்த்தி (57). இவா், மோட்டாா் இல்லாத ஃபைபா் படகு மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.

மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால், ஃபைபா் படகுகள் மூலம் கடலில் 5 நாட்டிக்கல் மைல் தொலைவு வரை மட்டுமே மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மூா்த்தி திங்கள்கிழமை காலை தனது ஃபைபா் படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றாா். மாலைக்குள் வீடு திரும்ப வேண்டிய அவா், செவ்வாய்க்கிழமை காலை வரை கரை திரும்பாததால் உறவினா்கள் மற்றும் சக மீனவா்கள் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தேவனாம்பட்டினம் கடற்கரையில் மூா்த்தியின் சடலம் கிடப்பதை புதன்கிழமை காலை அப்பகுதி மக்கள் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா், மூா்த்தியின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், தேவனாம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.