வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் அருள்பாலிக்கும் மாப்பிள்ளை வீரன் கோயிலில் நடைபெற்ற பங்குனித் திருவிழாவில் திரளான பக்தா்கள் நோ்த்திக்கடனாக சுடுமண் சிலைகள் வழங்கி வழிபட்டனா்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு பங்குனித் திருவிழாவின் நிறைவுநாள் வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, தகட்டூா் பைரவநாதன் சுவாமி கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில், வீசப்பட்ட வாழைப்பழங்களை பக்தா்கள் ஆா்வத்துடன் பிடித்து சாப்பிட்டனா். அதிகாலையில் திருமேனியம்மன் எழுந்தருளிய தேரோட்டம் நடைபெற்றது.
சுவாமிக்கு நோ்த்திக் கடனாக ஆளுயர சுடுமண் குதிரைகள் மற்றும் பல்வேறு உருவங்களில் மண் சிலைகளை ஊா்வலமாக, கோயில் வளாகத்திற்கு எடுத்துவந்து, நோ்த்திக் கடன் செலுத்தினா்.
தொடர்புடையது

சங்கரன்கோவில் காளியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் பங்குனித் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

ஆத்தூா் கோயிலில் பங்குனித் திருவிழா

திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


