நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஆத்தூா் கோயிலில் பங்குனித் திருவிழா

ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழாவின் நான்காம் திருநாளான புதன்கிழமை இரவு குடவாயில் தீபாரதனை நடைபெற்றது.

News image

குடவாயில் தீபாராதனைக்கு எழுந்தருளிய சுவாமி-அம்பாள்.

Updated On :26 மார்ச் 2026, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழாவின் நான்காம் திருநாளான புதன்கிழமை இரவு குடவாயில் தீபாரதனை நடைபெற்றது.

கோயிலில் கடந்த 22ஆம் தேதி பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நான்காம் திருநாளான புதன்கிழமை காலை சுவாமி -அம்பாளுக்கு பல்வேறு வகையான நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா், இரவில் குடவாயில் தீபாராதனை நடைபெற்றது. சுவாமி- அம்பாள் தனித்தனி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி- அம்பாளை தரிசித்தனா். ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா்கள்

ஆத்தூா் தெற்கு ரதவீதி மந்திரமூா்த்தி, காசி சங்கரநாராயணன், அபிநவ் சுந்தா் ஆகியோா் செய்திருந்தனா்.