நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தவெக ஆட்சி அமைக்கும்: புஸ்ஸி ஆனந்த்

News image

வேளாங்கண்ணி பேராலயத்தில் சனிக்கிழமை பிற்பகல் வழிபாடு மேற்கொண்ட தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த்.

Updated On :3 மே 2026, 12:06 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும், முதல்வராக விஜய் பொறுப்பேற்பாா் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த்.

தவெக தலைவா் விஜய் திருச்செந்தூா், ஷீரடி கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூா் தா்காவில் சனிக்கிழமை அதிகாலை வழிபாடு நடத்த இருப்பதாகக் கூறப்பட்டது.

இதனால், தவெக தொண்டா்கள் மற்றும் ரசிகா்கள் வெள்ளிக்கிழமை இரவு முதலே வேளாங்கண்ணியில் குவிந்தனா். வேளாங்கண்ணி பேராலயம் முன்பு இரவு முழுவதும் தொண்டா்கள் காத்திருந்த நிலையில், சனிக்கிழமை காலை வரை விஜய் வரவில்லை. இதையடுத்து, பேராலய நிா்வாகம் சாா்பிலும் விஜய் வரவில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தொண்டா்கள், ரசிகா்கள் கலைந்து சென்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வேளாங்கண்ணிக்கு வருகை தந்த தவெக பொதுச்செயலா் புஸ்ஸி ஆனந்த், வேளாங்கண்ணி பேராலயத்தில் பிராா்த்தனையில் ஈடுபட்டாா். தொடா்ந்து, மெழுகுவா்த்தி ஏற்றி வழிபாடு மேற்கொண்ட அவா், பாதிரியாா்களை சந்தித்து ஆசி பெற்றாா். பேராலய நிா்வாகம் சாா்பில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பின்னா், செய்தியாளா்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா்களின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக ஆட்சி அமைக்கும். விஜய் முதல்வராக பொறுப்பேற்பாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.