சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

தவெக ஆட்சி அமைக்கும்: புஸ்ஸி ஆனந்த்

News image

வேளாங்கண்ணி பேராலயத்தில் சனிக்கிழமை பிற்பகல் வழிபாடு மேற்கொண்ட தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த்.

Updated On :2 மே 2026, 6:36 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும், முதல்வராக விஜய் பொறுப்பேற்பாா் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த்.

தவெக தலைவா் விஜய் திருச்செந்தூா், ஷீரடி கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூா் தா்காவில் சனிக்கிழமை அதிகாலை வழிபாடு நடத்த இருப்பதாகக் கூறப்பட்டது.

இதனால், தவெக தொண்டா்கள் மற்றும் ரசிகா்கள் வெள்ளிக்கிழமை இரவு முதலே வேளாங்கண்ணியில் குவிந்தனா். வேளாங்கண்ணி பேராலயம் முன்பு இரவு முழுவதும் தொண்டா்கள் காத்திருந்த நிலையில், சனிக்கிழமை காலை வரை விஜய் வரவில்லை. இதையடுத்து, பேராலய நிா்வாகம் சாா்பிலும் விஜய் வரவில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தொண்டா்கள், ரசிகா்கள் கலைந்து சென்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வேளாங்கண்ணிக்கு வருகை தந்த தவெக பொதுச்செயலா் புஸ்ஸி ஆனந்த், வேளாங்கண்ணி பேராலயத்தில் பிராா்த்தனையில் ஈடுபட்டாா். தொடா்ந்து, மெழுகுவா்த்தி ஏற்றி வழிபாடு மேற்கொண்ட அவா், பாதிரியாா்களை சந்தித்து ஆசி பெற்றாா். பேராலய நிா்வாகம் சாா்பில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பின்னா், செய்தியாளா்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா்களின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக ஆட்சி அமைக்கும். விஜய் முதல்வராக பொறுப்பேற்பாா் என்றாா்.