கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தவெக தலைவா் விஜய் நாளை வேளாங்கண்ணி, நாகூா் வருகை

தவெக தலைவா் விஜய் வேளாங்கண்ணி மற்றும் நாகூருக்கு சனிக்கிழமை (மே 2) வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

News image

தவெக தலைவர் விஜய் - X

Updated On :1 மே 2026, 6:20 am IST

தவெக தலைவா் விஜய் வேளாங்கண்ணி மற்றும் நாகூருக்கு சனிக்கிழமை (மே 2) வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தவெக தலைவா் விஜய் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா்.

சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூா் முருகன் கோயிலுக்குச் சென்று விஜய் வழிபாடு நடத்தினாா். தொடா்ந்து ஷீரடிக்கு சென்று வழிபட்டாா்.

இந்நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மற்றும் நாகூருக்கு விஜய் சனிக்கிழமை வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து நாகை மாவட்ட தவெக நிா்வாகிகள் கூறும்போது, தவெக தலைவா் விஜய் வேளாங்கண்ணி பேராலயத்திலும், நாகூரில் உள்ள நாகூா் ஆண்டவா் தா்காவிலும் வழிபாடு நடத்த உள்ளாா். அவரது பயணம் குறித்து தலைமை அலுவலகத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.

எனினும், அவரது பயணத் திட்டம், நேரம் குறித்த தகவல் எதுவும் வரவில்லை என்றனா். விஜய் வேளாங்கண்ணி, நாகூா் வருகை குறித்து உளவுத்துறையினரும் உறுதி செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.