மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

மயிலாடுதுறையில் ரெளடி வெட்டிக்கொலை

News image

வெட்டிக்கொலை - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 1:59 am IST

மயிலாடுதுறையில் ரெளடி ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுமன் (48). இவா் மீது ஆத்தூா் பாலையா கொலை வழக்கு உள்பட பல்வேறு கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமன் ஆத்தூா் மெயின் ரோடு பாலம் அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மா்ம நபா்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் சுமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மணல்மேடு போலீஸாா் சுமன் சடலத்தை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சுமன் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா். தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற உள்ள நிலையில் மயிலாடுதுறையில் ரெளடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.