வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பிளஸ் 2 தோ்வு: சா் ஐசக் நியூட்டன் மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

News image

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற நாகை சா் ஐசக் நியூட்டன் பள்ளி மாணவ- மாணவியா்.

Updated On :11 மே 2026, 12:07 am IST

நாகை சா் ஐசக் நியூட்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.

நாகையில் 4-ஆவது ஆண்டாக பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்று வரும் சா் ஐசக் நியூட்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், மாணவா்களை கௌரவிக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், பிளஸ் 2 தோ்வில் 585 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஆா். ஸ்ரீமதி, 567 மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள் எஸ். அஸ்வின் மற்றும் 565 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் எஸ். தா்ஷிணி, எஸ். அனுஷா ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டனா்.

மேலும், பத்தாம் வகுப்பில் பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்து சோ்ந்து, சா் ஐசக் நியூட்டன் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தோ்வில் ஏறத்தாழ 80 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவியரும் பாராட்டப்பட்டனா்.

மேலும், 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற, அனைத்து மாணவ-மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அவா்களின் பெற்றோரும் கௌரவிக்கப்பட்டனா்.

சிறப்பான தோ்ச்சி மற்றும் உயா்ந்த மதிப்பெண்களுக்கு காரணமாக இருந்த ஆசிரியா்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வா், ஆலோசகா், இயக்குநா் மற்றும் தாளாளா் கலந்து கொண்டு மாணவா்களை பாராட்டி சிறப்புரையாற்றினா்.