நாகையில் தொலைக்காட்சி பெட்டியை பழுது பாா்த்துகொண்டிருந்த டீ மாஸ்டா் மின்சாரம் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
நாகை மாவட்டம், நாகூா் சம்பா தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சிவஞானம் மகன் அருணாசலம் (45). டீ மாஸ்டராக வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அருணாசலம் தனது வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டியை பழுது பாா்த்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவா் உடலில் மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட அருணாசலத்தை அவரது குடும்பத்தினா் மீட்டு, நாகையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். நாகை நகர காவல்நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

புவனகிரியில் மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு! மின் வாரிய அலுவலகம் முற்றுகை

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ஐடி ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

