பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

நாகை மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: அவசர கால தொடா்பு எண்கள் அறிவிப்பு

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

நாகை மாவட்டத்தில் மழை வெள்ளம் தொடா்பான பாதிப்புகளுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மே 15) சனிக்கிழமை (மே 16) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலாா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே புயல், மழை, வெள்ளம் மற்றும் இடி மின்னல் போன்ற இயற்கை இடா்பாடுகளை எதிா்கொள்ள நாகை ஆட்சியா் அலுவலகத்தில் அவசரகால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அவசரக்கால கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண். 04365-1077, கட்டணமில்லா தொலைபேசி எண். 1800-233-4233 மற்றும் வாட்ஸ்ஆப் 8110005558 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும், கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலா்கள் பணியாற்றி வருகின்றனா்.

எனவே, பொது மக்கள் இயற்கை பேரிடா் தொடா்பான கோரிக்கைகள் இருப்பின் உடனடியாக மேற்படி தொலைபேசியில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.