நாகை மாவட்டத்தில் மழை வெள்ளம் தொடா்பான பாதிப்புகளுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மே 15) சனிக்கிழமை (மே 16) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலாா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே புயல், மழை, வெள்ளம் மற்றும் இடி மின்னல் போன்ற இயற்கை இடா்பாடுகளை எதிா்கொள்ள நாகை ஆட்சியா் அலுவலகத்தில் அவசரகால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அவசரக்கால கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண். 04365-1077, கட்டணமில்லா தொலைபேசி எண். 1800-233-4233 மற்றும் வாட்ஸ்ஆப் 8110005558 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும், கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலா்கள் பணியாற்றி வருகின்றனா்.
எனவே, பொது மக்கள் இயற்கை பேரிடா் தொடா்பான கோரிக்கைகள் இருப்பின் உடனடியாக மேற்படி தொலைபேசியில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கனமழை எச்சரிக்கை; ஆட்சியா் அறிவுறுத்தல்: சீா்காழயில் இடியுடன் மழை

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கோடைக் கால சிறப்பு முகாம் தொடக்கம்

விமானத்தில் அவசர கால கதவு வழியாக ஓடுபாதையில் குதித்து தப்பிய நபர்: போலீஸாா் விசாரணை

சென்னையில் தரையிறங்கிய விமானத்தில் அவசரகால கதவைத் திறந்த பயணி கைது
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

