சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்காலில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 4:00 am

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்காலில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இயக்கத் தலைவர் எஸ். அனந்தகுமார் தலைமை வகித்தார். 
மக்களின் நீராதார அடிப்படை உரிமையான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு அலட்சியமாக இருப்பது தவறு. காரைக்காலில் நீர்நிலைகளைப் பராமரித்து மேம்படுத்த வேண்டும். 
புதுச்சேரி அரசை கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும். 
மாநிலத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தலைமையில் சீரிய நிர்வாகத்தை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
வன்னியர் வளர்ச்சி இயக்கத் தலைவர் விஜயகுமார், தேசிய மீனவர் பேரவை துணைத் தலைவர் குமாரவேல், சமூக ஆர்வலர் பாலு, இயக்கத்தின் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் முல்லைவேந்தன், ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜசேகர் உள்ளிட்டோர் இயக்கத்தின் கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினர். இயக்கப் பொருளாளர் ராஜதுரை நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.