காரைக்கால் பள்ளியில் இந்திய ஆயுஷ் அமைச்சக ஆதரவுடன் மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் யோகா மற்றும் ஆராய்ச்சி மையம், காரைக்கால் கலெக்ஸோ சேவை அமைப்பு ஆகியவை இணைந்து, காரைக்கால் காவிரி பொதுப் பள்ளியில் சுவாமி விவேகானந்தா யோகா பூங்கா மூலம் யோகா பயிற்சி அண்மையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் சிவகுமார் தலைமை வகித்தார்.
கலெக்ஸோ சேவை அமைப்பின் ஆலோசனைக் குழு தலைவர் பாரீஸ்ரவி, யோகா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும், கோட்டுச்சேரி கலெக்ஸோ மையத்தில் நடைபெற்றுவரும் இலவச யோகா பயிற்சி குறித்தும் மாணவ மாணவியருக்கு விளக்கிப் பேசினார்.
மன அழுத்தம் நீங்கி, மனம் ஒருமைப்படுவதால் கல்வி மேம்படும். எனவே மாணவர்கள் யோகா பயிற்சியை கண்டிப்பாக தகுதியானவர்களிடம் பெற்று, தினமும் பயிற்சியில் ஈடுபடவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
யோகா பேராசிரியர் ஆனந்த், மாணவ மாணவியருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் சுமார் 100 மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அருள் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!

தைரியம் கூடும் மகர ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 31)
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


