பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

இலவச யோகா பயிற்சி

காரைக்கால் பள்ளியில் இந்திய ஆயுஷ் அமைச்சக ஆதரவுடன் மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On :18 ஏப்ரல் 2018, 6:52 am IST

காரைக்கால் பள்ளியில் இந்திய ஆயுஷ் அமைச்சக ஆதரவுடன் மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் யோகா மற்றும் ஆராய்ச்சி மையம், காரைக்கால் கலெக்ஸோ சேவை அமைப்பு ஆகியவை இணைந்து, காரைக்கால் காவிரி பொதுப் பள்ளியில் சுவாமி விவேகானந்தா யோகா பூங்கா மூலம் யோகா பயிற்சி அண்மையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் சிவகுமார் தலைமை வகித்தார்.
கலெக்ஸோ சேவை அமைப்பின் ஆலோசனைக் குழு தலைவர் பாரீஸ்ரவி, யோகா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும், கோட்டுச்சேரி கலெக்ஸோ மையத்தில் நடைபெற்றுவரும் இலவச யோகா பயிற்சி குறித்தும் மாணவ மாணவியருக்கு விளக்கிப் பேசினார்.
மன அழுத்தம் நீங்கி, மனம் ஒருமைப்படுவதால் கல்வி மேம்படும். எனவே மாணவர்கள் யோகா பயிற்சியை கண்டிப்பாக தகுதியானவர்களிடம் பெற்று, தினமும் பயிற்சியில் ஈடுபடவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
யோகா பேராசிரியர் ஆனந்த், மாணவ மாணவியருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் சுமார் 100 மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அருள் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.