காரைக்கால் போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் வாகனம் பதிவு செய்ய ஆன்-லைன் முறையை மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
இந்த திட்டத்தின் பயன்கள் குறித்து மண்டல போக்குவரத்து அலுவலர் பழனிசாமி ஆட்சியருக்கு விளக்கிக் கூறினார்.
இந்த திட்டம் குறித்து ஆட்சியர் ஆர்.கேசவன் செய்தியாளர்களிடம் கூறியது : பல்வேறு அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் சேவைகள் ஆன்-லைனில் கொண்டுவரப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் தற்போது பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது காரைக்கால் மாவட்டத்தில் 10 வாகன டீலர்கள் இவ்வாறான சேவையை பயன்படுத்த முடியும். இவர்களுக்கான பதிவு எண் தரப்பட்டுள்ளது. வாகனங்கள் வாங்க வருவோரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு, ஆன்-லைன் மூலம் பதிவு செய்யப்பட்டவுடன் வாகனப் பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் வந்துவிடும்.
இதுகுறித்து வாகனம் வாங்குவோர், டீலர்களிடம் பேசி இவ்வாறான சேவையை பெற ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும். எண் கிடைப்பது உள்ளிட்ட பிற ஆவணங்கள் தாமதத்துக்கு இனி வாய்ப்பில்லை. சாதாரணமாக 3 நாள்களில் ஆகவேண்டிய பணிகள் ஒரே நாளில் செய்து முடிக்கப்பட்டுவிடும். பொதுமக்கள் நேரடியாக சில ஆவணங்கள் பெறுவதற்கான பதிவை ஆன்-லைனில் செய்வதற்கான திட்டம் அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |

தமிழகத்தில் மே 23 வரை மழைக்கு வாய்ப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 17-05-2026

சிஎஸ்கேவின் சாதனையை முறியடித்த ஆர்சிபி!
விடியோக்கள்

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
