காரைக்கால் போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் வாகனம் பதிவு செய்ய ஆன்-லைன் முறையை மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
இந்த திட்டத்தின் பயன்கள் குறித்து மண்டல போக்குவரத்து அலுவலர் பழனிசாமி ஆட்சியருக்கு விளக்கிக் கூறினார்.
இந்த திட்டம் குறித்து ஆட்சியர் ஆர்.கேசவன் செய்தியாளர்களிடம் கூறியது : பல்வேறு அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் சேவைகள் ஆன்-லைனில் கொண்டுவரப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் தற்போது பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது காரைக்கால் மாவட்டத்தில் 10 வாகன டீலர்கள் இவ்வாறான சேவையை பயன்படுத்த முடியும். இவர்களுக்கான பதிவு எண் தரப்பட்டுள்ளது. வாகனங்கள் வாங்க வருவோரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு, ஆன்-லைன் மூலம் பதிவு செய்யப்பட்டவுடன் வாகனப் பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் வந்துவிடும்.
இதுகுறித்து வாகனம் வாங்குவோர், டீலர்களிடம் பேசி இவ்வாறான சேவையை பெற ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும். எண் கிடைப்பது உள்ளிட்ட பிற ஆவணங்கள் தாமதத்துக்கு இனி வாய்ப்பில்லை. சாதாரணமாக 3 நாள்களில் ஆகவேண்டிய பணிகள் ஒரே நாளில் செய்து முடிக்கப்பட்டுவிடும். பொதுமக்கள் நேரடியாக சில ஆவணங்கள் பெறுவதற்கான பதிவை ஆன்-லைனில் செய்வதற்கான திட்டம் அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்ஸ்டாவில் பழகி 14 வயது சிறுவனுடன் 40 வயது பெண்மணி திருமணம்! -போலீஸில் புகார்
போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


